( இந்தக் கவிதை எம்சிஏ படிக்கும்பொழுதுஎன்னுடைய ஜுனியர் மாணவனுக்காக நான் எழுதிக் கொடுத்த காதல் புலம்பல். )
ஏஞ்சலுக்கு ஒரு
ஏழையின் அஞ்சல்
இதோ
என் இதயமூலையில்
ஊஞ்சல்கட்டி ஆடுபவளே
ஏஞ்சலே
என்
பேனாவின் அழுத்தத்தில்
உன்னிதயம் …
உடைந்துவிடக்கூடாது என்றுதான்
உனக்கு எழுதும்
அஞ்சல்கள் எல்லாம்
வெற்றுத்தாளாகவே வருகிறது
உன்னைப்பற்றி எழுத
கவிதைகளைத் தேடினேன்
போடி!
எந்தக்கவிதையும்
உன் பெயரைவிடவும்
அழகாகயில்லை’
நீதானே நடந்துசெல்கிறாய்
அது எப்படி?
உன் நிழல்
என் இதயத்தில்’
போதும் எனக்கு
அதுமட்டும் போதும்’
எதிரெதிரெ வரும்போது
தலைதாழ்த்துவாயே அந்த
வெட்கம் போதுமடி’
என்னைத்
தாண்டிசென்ற பிறகும்
தலைதிருப்பி பார்ப்பாயே அந்த
பார்வை போதுமடி’
உனக்கு பின்னால்
நான்
நடந்துகொண்டே வரவேண்டும் நீ
நரகத்திற்கு சென்றாலும்!
உனக்கு
கடிதம் எழுதி எழுதி
கிழித்தும் போட்டதில்
அடிக்கடி பிரசவமாகிறது…
அடியேன் வீட்டு குப்பைத்தொட்டி!
அழகிப்போட்டியில் நீ
கலந்துகொள்ளாததால்..
ஐஸ்வர்யா ராய் தப்பித்தாள்!
உன்னைப் பார்ப்பதற்காக
துடித்துக்கொண்டிருக்கும் என்
இதய ஓட்டத்திற்கு முன்னால்
பி.டி. உஷா கூட
பிச்சை எடுக்கவேண்டும்
சி (C) மொழி
ஜாவா (C++) மொழி
தெரிந்தாலும்,
தெரியாமல் போனதே..
உன் மௌன மொழி?
நீ
ஜன்னலைத்திறந்தால் நான்
வாசலில் நிற்கிறேன்!
நீ
ஜன்னலை மூடினால் உன்
இதயத்தில் நிற்கிறேன்!
ஓரே ஒருமுறை சிரி
எனக்கு வானவில்லை பார்க்க
ஆசையாகயிருக்கிறது
மேயரை…
மக்கள் தேர்ந்தெடுக்கலாம்!
ஆனால் ஏஞ்சலே!
என்
மனசுக்கு நீதாண்டி
மேயர்!
என்
கண்ணுக்கு நீதாண்டி..
கவுன்சிலர்!
எனக்கு தேசப்பற்று அதிகம்
ஆம்
உன்
சுடிதாரைகண்டுதான் நான்
சுதந்திரதினமே கொண்டாடுகிறேன்!
வருடத்திற்கொருமுறைதான்
நீ
பிறந்தநாள் கொண்டாடுகிறாயோ?
அதை
மாதமொருமுறை
மாற்றிக்கொள்வாயா?
நான் அடிக்கடி
வாழ்த்துஅட்டை அனுப்பவேண்டும்
உனக்கு
வாழ்த்துஅட்டை
அனுப்புவதற்காகவாவது
ஏதாவது பண்டிகைகள்…
வந்துகொண்டேயிருக்கவேண்டும்
மதச்சார்பான
பண்டிகைகள் எல்லாம் நம்
காதலுக்கு
குறுக்கே நிற்பதில்லை
உன்விழியும்
என்விழியும்
மோதித் தெறிக்கின்ற
மத்தாப்பு நிமிடமெல்லாம்
எனக்குத் தீபாவளிதான்
உனைக்கண்டபிறகுதான்
என் கண்கள்
நோன்பை முறித்துக்கொள்கிறது
ஆகவே உன்னை
ரசிக்கும் நிமிடமெல்லாம் எனக்கு
ரம்சான்தான்
உன்
ஆசிர்வாதம் தேடி
அலைந்துகொண்டிருக்கும் எனக்கு
உன்
கிருபைகிடைக்கின்ற எல்லாநாளுமே
கிறிஸ்துமஸ்தான்
ஆகவே
எதிர்பார்த்துக் கொண்டேயிரு
எல்லா பண்டிகைக்கும்
வாழ்த்து வரும்
திருமணத்தை
சொர்க்கத்தில் நிச்சயிக்கின்ற கடவுள்.
நம் காதலை மட்டும்
இக்கல்லூரியில் நிச்சயிக்கட்டும்!
- ரசிகவ் ஞானியார்
கார்த்திகா said...
The introduction about urself drags me into ur blog. My Goodluck to find it. It's interesting to read this poem. But it's little much that the lines specified Mayer and counsellor. It truly makes me to laugh.
Karthika. www.neyamukil.blogspot.com
June 5, 2008 at 1:57 AM
Gnaniyar @ நிலவு நண்பன் said...
//Karthika said...
The introduction about urself drags me into ur blog. My Goodluck to find it. It's interesting to read this poem. But it's little much that the lines specified Mayer and counsellor. It truly makes me to laugh.//
Thanks for your comments karthika...
June 5, 2008 at 6:05 AM
Aruna said...
//திருமணத்தை
சொர்க்கத்தில் நிச்சயிக்கின்ற கடவுள்.
நம் காதலை மட்டும்
இக்கல்லூரியில் நிச்சயிக்கட்டும்!//
ada idhu nallaarukke!
anbudan aruna
June 6, 2008 at 12:20 AM
Gnaniyar @ நிலவு நண்பன் said...
//Aruna said...
//திருமணத்தை
சொர்க்கத்தில் நிச்சயிக்கின்ற கடவுள்.
நம் காதலை மட்டும்
இக்கல்லூரியில் நிச்சயிக்கட்டும்!//
ada idhu nallaarukke!
anbudan aruna//
நன்றி அருணா
June 6, 2008 at 12:48 AM