ஆப்டெக் படிக்கும்பொழுது மருதகுளம் என்ற ஊரில் இருந்து படிக்க வந்த அகிலன் என்பவன் எனது ஊரில் இருந்து படிக்க வந்த வந்த ரீனா என்ற இந்திக்காரப் பொண்ணின் மீது லேசாக காதல் வiலையை வீசினாhன். அவளைப்பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பான். அந்த இந்திக்காரப் பெண்ணிற்கு தமிழ் சுத்தமாக தெரியாது என்பதால் நாங்கள் அந்தப்பெண் பக்கத்தில் வரும்பொழுது ஏதாவது பேசி கிண்டலடிப்போம்.


ஒரு நாள் நானும் அகிலனும் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது அந்த ரீனாப்பொண்ணும் தண்ணீர் குடிக்க வந்தாள்.
"டேய் என்னடா பையா ..ஆள் சூப்பரா இருக்கே..? உங்கப்பன் என்ன பண்றான்டா..?" என்று அந்தப்பெண்ணை பார்த்து கேட்க..

அவளோ.."வாட்..வாட்.." என்று திணறி உளறி பின் சென்றுவிட்டாள்.

அரைமணிநேரம் கழித்து ஆப்டெக்கின் மேலாளர் எங்களை அழைத்து கண்டித்தார்.
"இந்தப் பாருங்க அந்தப்பொண்ணு பெரிய இடம். கிண்டல் பண்ணாதீங்க..அப்புறம் பிரச்சனையாயிடுச்சுன்னா எனக்குத் தெரியாதுப்பா சொல்லிட்டேன்..."
என்று நாசூக்காக கண்டித்தார்.

அதன்பிறகு அந்த ரீனாவை நாங்கள் கிண்டலடிப்பதைக் குறைத்துக்கொண்டோம். அகிலனும் ரீனாவும் எதிரெதிரே கடக்கும்போது முறைப்பதோடு சரி. மோதலில்தான் காதல் ஆரம்பிக்கும் என்று சொல்வர்கள். ஆனால் அகிலனுக்கும் ரீனாவுக்கும் இடையில் எதுவுமே நடக்கவில்லை. அவளும் கோர்ஸை பாதியிலேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.

அந்த அகிலன் தற்பொழுது சென்னையில் பணிபுரிந்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு ஒருமுறை சென்று பார்த்தேன். அதன்பிறகு அவனைப்பற்றிய தகவலே இல்லை.

ஆனால் அவன் அவள் மீது வைத்தது காதல் அல்ல. அவளின் உடை நடை அழகு கண்டு உணர்ச்சிவசப்பட்டுப்போன ஒரு இனக்கவர்ச்சிக் காதல்தான்.

மருதகுளப் பையனின்
இதயக்குளத்தில்
கல்லெறிந்தது காதல்!

ரீனா மீது வைத்த காதல்
வீணாகிப் போனதப்பா


- ரசிகவ் ஞானியார்

0 comments:

Newer Post Older Post Home